இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்ற நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. எனது எம்.பி. நண்பர்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அவையில் அப்போது இல்லை. அப்படியிருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற முடக்கத்துக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் தற்போது காங்கிரஸ் எம்.பி.க்களை நண்பர்கள் என அழைத்ததோடு, காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் கூறியிருக்கிறார்.