மொத்தம், 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீஹாரில், நிதிஷ்குமார் தலைமையிலான அணியும், பாஜக தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், பீகாரில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாட்னாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, மாட்டுக்கறி உண்பது சைத்தான் உடலில் புகுவது போன்றது என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ”நீங்கள் அனைவரும் மாட்டுக்கறி உண்கிறீர்களா என்ன? இது யாதவ மக்களை இழிவுபடுத்தும் செயல். லாலுஜி நீங்கள் ஆட்சிக்கு வர இந்த யாதவர்கள் உதவினார்கள். எல்லா யாதவர்களும் மாட்டுக்கறி உண்கிறார்களா என்ன? இல்லையே.. இது யதவ மக்களையும், பீஹார் மக்களையும் இழிவுபடுத்தும் செயல்.