பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஏழு கேள்விகள்: பிரதமர் மோடி பதில் சொல்வாரா?

சனி, 25 ஜூலை 2015 (17:15 IST)
பீகாருக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
 

 
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி அவர்களே உங்களுக்கு நான் 7 கேள்விகளை முன்வைக்கிறேன். அவற்றில் 2 பீகார் மாநிலம் சம்பந்தப்பட்டது, 5 கேள்விகள் பொதுவானவை. இந்திய தேசம் உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
 
14 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பீகாருக்கு வருகை தருகிறார். அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். நிறைய வாக்குறுதிகள் எங்களுக்காக காத்திருப்பது தெரியும். ஆனால், ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என நிதிஷ் குமார் பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.
 
பிரதமர் மோடி இன்று பீகார் தலைநகர் பாட்னாவுக்கு வருகிறார். பிறகு முஸாபர்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில் பிரதமருக்கு நிதிஷ் குமார் முன்வைத்துள்ள 7 கேள்விகள்:
 
 
பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், மோடிக்கு 7 கேள்விகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்வைத்து பரபரப்பை கூட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்