இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி அவர்களே உங்களுக்கு நான் 7 கேள்விகளை முன்வைக்கிறேன். அவற்றில் 2 பீகார் மாநிலம் சம்பந்தப்பட்டது, 5 கேள்விகள் பொதுவானவை. இந்திய தேசம் உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
14 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பீகாருக்கு வருகை தருகிறார். அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். நிறைய வாக்குறுதிகள் எங்களுக்காக காத்திருப்பது தெரியும். ஆனால், ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என நிதிஷ் குமார் பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.