ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவன் ஒருவன் பேனாவை நுகர்ந்து பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவனை பரிசோதித்தபோது, அந்த மாணவன் பயன்படுத்தியது போதை பேனா என்பது தெரியவந்தது.
இந்த போதை ஹூகா பேனா பரவலாகவும் எளிமையாகவும் மாணவர்களுக்கு கிடைப்பதாக சோதனையில் தெரியவந்துள்ளது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இதற்கு அடிமையாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.