9ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சக மாணவர்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (14:48 IST)
சக மாணவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி சென்று கற்பழித்துள்ளனர்.
 
கடந்த புதன்கிழமை ஹரியானா மாநிலத்தின் குர்காவன் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவியை, அவருடன் படிக்கும் 3 மாணவர்கள் ஆட்டோவில் வந்துள்ளனர்.
 
ஆட்டோவில் வந்த மாணவர்கள் மாணவியை வலுக்கட்டாயத்துடன் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர், யாரும் இல்லாத மறைமுக இடத்திற்கு கடத்தி கொண்டு சென்று அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இது குறித்து மற்றவர்களிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
 
கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாணவி இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் சக மாணவர்கள் 3 பேர் மற்றும் ஆட்டோ டிரைவர் மீதும் புகார் பதிவு செய்துள்ளனர்.
 
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்