9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்ட பள்ளி முதல்வர் கைது

திங்கள், 8 பிப்ரவரி 2016 (13:36 IST)
ஹரியானா மாநிலம் குர்கானில் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வரும், இயக்குநருமாக செயல்பட்டு வந்த ஒருவர் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.


 
 
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை எடுதுள்ளனர். அவர்களின் புகாரில்,  சம்பவம் நடந்த அன்று எங்கள் மகள் முதல்வர் மற்றும் இயக்குநரால் அவரது அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளால்.
 
பள்ளி முதல்வரின் வந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். பின்னர் அவள் அழுததால் இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார் அந்த பள்ளியின் முதல்வர். இவ்வாறு சிறுமியின் பெற்றோர்கள் தங்கள் புகாரில் குறிப்புட்டுள்ளனர்.
 
அந்த சிறுமி நடந்த சம்பவத்தை கூறி, தான் பள்ளிக்கு போகமாட்டேன் என தன் தாயிடம் கூறிய பின்னரே இது தெரியவந்தது.
 
சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த அந்த குற்றவாளி ராம் கோபால் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக குர்கான் காவல் துறை, மக்கள் தொடர்பு அதிகாரி ஹவா சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்