பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமை ஆசிரியர்

புதன், 10 டிசம்பர் 2014 (09:06 IST)
சட்டீஸ்கர் மாநிலத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமை ஆசிரியர் அரவிந்த் திவாரி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
சட்டீஸ்கர் மாநிலம், உர்லா மாவட்டத்தில் உள்ள சரோரா கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது.
 
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சமீபத்தில் வேலையில் சேர்ந்த 36 வயதுடைய அரவிந்த் திவாரி, பள்ளி  மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில், இவர் வகுப்பு நேரத்தில் அநாகரீகமான முறையிலும், பாலியல் வக்கிரத்துடனும் இவர் நடந்து கொள்வதாகவும் சில வேளைகளில் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும் சில மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
 
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்கு மூலங்களைப் பெற்ற காவல் துறையினர், தலைமை ஆசிரியர் அரவிந்த் திவாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்