மேலும் பல்வேறு வகையில் கடுமையான வார்த்தைகளை அவர்கள் தங்களின் தீர்ப்பில் முன்வைத்துள்ளனர். அதில், “ஜெயலலிதா ‘மனிதர்களை நேசிக்கும் கொடைப்பண்பு’ காரணமாக, போயஸ் தோட்டத்தில் சசிகலாவுக்கு இடம் கொடுக்கவில்லை; மாறாக குற்ற நடவடிக்கைகளிலிருந்து காத்துக் கொள்ளவே சசிகலாவிற்கு இடம்கொடுத்து ஜெயலலிதா வைத்திருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உண்மைகள் நமக்கு அறிவுறுத்துவதெல்லாம், பெரிய அளவில் சொத்துகளைக் குவித்து அவற்றை செயல்படாத பல நிறுவனங்கள் மூலம் மறைத்து சட்ட விரோத சொத்துக் குவிப்பை சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி மேற்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
இது தவிர, ’இவர்கள் ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டதையும், போயஸ் தோட்டத்தில் அனைவரும் இருந்து கொண்டிருக்கும் போது சசிகலா உள்ளிட்டோர் செய்த வேலைகள் தனக்கு தெரியாது என்று ஜெயலலிதா கூறியதையும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிபிட்டுள்ளனர்.