அதிமுக, திமுக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் மீனவர் பாதுகாப்பு குறித்து மனு தரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி.க்கள் கொடுக்கும் மனுவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவிறுத்தியுள்ளது.
தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான வழக்கில் அட்டார்னி ஜெனரல் விளக்கமளித்துள்ளார். கச்சத்தீவை திரும்ப பெறுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைப்பதாகவும், இலங்கை மீது போர் புரிந்தா கச்சத்தீவை மீட்க முடியும் என்று அட்டார்னி ஜெனரல் ரோத்கி கேள்வி எழுப்பினார். இருநாட்டுப் பிரச்சனை என்பதால் நீதிமன்றத் தலையிட முடியாது எனறும் அவர் வாதிட்டார்.