திருமணம் செய்யும் படி வற்புறுத்தியபோது, சர்தார் சிங் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார் என்று அவருடைய காதலி ஆஷ்பால் போகல் புகார் அளித்துள்ளார்.
எங்களுக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. என்னுடன் அவர் சேர்ந்து வாழ்ந்ததால் கடந்த ஆண்டு நான் கர்ப்பமானேன். இந்த சந்தோஷமான விஷயத்தை அவரிடம் சொன்ன போது எனக்கு இந்த குழந்தை வேண்டாம், உடனடியாக கர்ப்பத்தை கலைத்து விடு, இல்லையெனில் உன்னிடம் உள்ள தொடர்பை துண்டித்து கொள்வேன் என்று கூறினார். இதனால், அவரது வற்புறுத்தலின் பேரில் நான் கர்ப்பத்தை கலைத்தேன். அதன் பிறகு, என்னை விட்டு அவர் விலக ஆரம்பித்தார்.
பின்னர், உடனடியாக என்னுடை தொடர்பை துண்டித்து விட்டார். இப்போது திருமணம் செய்ய மறுத்து வருகிறார். திருமணம் செய்யும் படி வற்புறுத்திய போது என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். என்னை நம்ப வைத்து மோசடி செய்து இருக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
ஆனால், இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த புகார் குறித்து விசாரிக்கும் படி காவல் நிலையத்திற்கு லூதியானா போலீஸ் கமிஷனர் பாம்ராஜ்சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆஷ்பால் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னை நம்ப வைத்து மோசடி செய்து இருக்கும் சர்தார்சிங் தற்போது பொய் சொல்லி வருகிறார். இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தா புகைப்படும் மற்றும் அவருக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று கூறினார்.