இது குறித்து டெல்லியில் நடந்த ஒரு விழாவில் சானியா மிர்சா பேசும் போது, ’நான் ஒரு பெண்ணாக இருப்பதால், வாழ்க்கையில் நிறையப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன். நான் ஒரு ஆணாக இருந்திருந்தால் சில சர்ச்சைகளை தவிர்த்திருக்க முடியும்.
ஒருநாள் அனைவரும் ஆணும் பெண்ணும் சமம் என சொல்வார்கள் ,பெண்கள் ஒரு பொருளைப் போன்று நடத்தப்படமாட்டார்கள். பெண்கள் பாராபட்சமாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அது சரியில்லை. நமது சிந்தனை மாற வேண்டும். அதே போல் பெண்கள் தங்கள் சொந்த மதிப்பு உணர வேண்டும்’ இவ்வாறு கூறினார்.