டெல்லியில், நடைபெற்ற "டைம்ஸ் இலக்கிய திருவிழா" என்ற நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசுகையில், "எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் என்ற நூலுக்கு 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய ராஜீவ் காந்தி அரசு தடை விதித்தது தவறானது." என்று கூறினார்.