ஒவ்வொரு எம்.பியும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறுயுள்ளதால், அதை ஏற்றுக்கொண்ட டெல்லி மேல் சபை எம்.பியான சச்சின் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டலத்தில் உள்ள புத்தம் ராஜு கண்டிகை கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
மேலும் இந்த கிராமத்திற்கான தெரு விளக்கு, சாலை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இப்பணிகளை பார்வையிட சச்சின் நவ, 16 நாளை கண்டிகை கிராமத்துக்கு நேரில் செல்லவுள்ளார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லூர் செல்கிறார்.