கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ’தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தில் பங்கேற்குமாறு சச்சின் தெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், சசி தரூர் உள்பட 9 பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டம் ஓராண்டு நிறைவடைய இருப்பதையொட்டி அதற்கான தேசிய பாடல் சங்கர்-எஷான்-லாய் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதில் சங்கர் மஹாதேவனுடன் இணைந்து சச்சின் டெண்டுல்கரும் சில வரிகளை பாடியுள்ளார்.