வாக்காளர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை!

வியாழன், 24 ஏப்ரல் 2014 (10:36 IST)
ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வரும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு ரன்னும் எண்ணப்படும். தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படும். உங்களது வாக்கின் மதிப்பை குறைத்து மதிப்பிடார்தீர்கள்." என்று சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
நீங்கள் உங்களது ஜனநாயக கடமையை செய்வீர்கள் என்று நம்புகிறேன். தயவு செய்து எல்லோரும் வாக்களியுங்கள் என்று சச்சின் கேட்டு கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்