நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து அதற்கான மாற்று பணத்தை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெறலாம் என கூறினார். ஆனால் ஒரு வாரத்திற்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அறிவித்துள்ளனர்.
இந்த உஷா வங்கி பாலியல் தொழில் செய்யும் பெண்களால் அவர்களுக்காக தொடங்கப்படும் வங்கியாகும். பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் பணத்தை வங்கியில் போடாமல் கையில் வைத்திருக்கும் பழக்கம் உடையவர்கள். வழக்கமாக இந்த வங்கியில் பாலியல் தொழிலாளர்களால் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் டெபாசிட் ஆகும். ஆனால் கடந்த இரண்டு தினங்களாக 50 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.