செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ.5,000 வரை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
இதனிடையே ரூ.5000 வரை மட்டும்தான் வங்கியில் டெபாசிட் செய்ய முடியும் என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. மேலும் டிசம்பர் 30ம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் ஒரு முறை மட்டுமே ரூ.5,000 டெபாசிட் செய்ய முடியும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.