மழை வருவதை துல்லிய மாக கணிக்க இந்தியா இங்கிலாந்து விஞ்ஞானிகள் இணைந்து வங்க கடலில் தண்ணீருக்கு அடியில் ரோபோட்டுகள் அமைக்கின்றன. இதன் மூலம் கடலில் ஏற்படும் புயல், காற்றழுத்த தாழ்வு நிலையை துல்லியமாக கணித்து மழை பெய்யும் தன்மையை கண்டறிய முடியும்.
ரோபோட்டுகள் மூலம் இந்தியாவில் மழை மற்றும் புயல் குறித்து குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமான தகவல் கிடைப்பதுடன் பருவ மழை காலத்தில் மழையின் அளவுக்கு குறித்தும் அறிய முடியும் என்பதால், இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.