வைஷாலி மாவட்டம் தாட்நகரில் வசித்து வந்தவர் ஷிவ்ஜி ராய் (வயது 45). ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பிரமுகரான இவர், தாட்நகர் கிராம பஞ்சாயத்து தலைவராக பொறுப்பில் இருந்தார். நேற்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.