ஐ.பி.எல். போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குற்றச்சாட்டில் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.
அந்த அறிக்கையில் சீனிவாசன் பெட்டிங் மற்றும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து தன்னை மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் தொடர அனுமதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்குமா அல்லது நிராகரிக்குமா? என்பது சில தினங்களில் தெரிய வரும்.