இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ”செம்மரக் கடத்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. செம்மரங்கள் அழிந்து வரும் இனம்; அதை காக்க வேண்டியது நம் கடமை.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகும், செம்மரக் கடத்தல் தொடர்கிறது. செம்மரக் கடத்தலை தடுக்காவிட்டால், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்” என்று கூறியுள்ளார்.