மோசடி வழக்கில் நேரில் ஆஜராக தயார்: உம்மன் சாண்டி

புதன், 13 ஜனவரி 2016 (23:18 IST)
சோலார் பேனல் மோசடி வழக்கில் விசாரணைக் கமிஷன் முன்பு நேரில் ஆஜாரக தயராக உள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
 

 
கேரளாவில், சோலார் பேனல் மோசடி வழக்கில் ஜனவரி 25 ஆம் தேதி அந்த  மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை கமிஷன் நீதிபதி சிவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
 
தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், திருவனந்தபுரத்தில் விசாரணை நடத்துவதாக இருந்தால் கமிஷன் முன்பு ஆஜராக தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்