கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக, இந்திய ரூபாய் நோட்டுகளில் வெள்ளி கம்பி சேர்த்து ரிசர்வ் வங்கி அச்சடித்து வருகிறது. ஆனால் தவறுதலாக, அந்த வெள்ளிக்கம்பி இல்லாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. அதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாகவ்ம் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
தவறாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது. மேலும், தவறுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்த அச்சகத்தின் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.