அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு தினமும் பிரெட், பால் முதலியவை கொடுப்பது வழக்கம். இந்நிலையில், நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரெட் பாக்கெட்டை அவர் பிரித்தபோது அதற்குள்ளிருந்து ஒரு எலி தாவிக் குதித்து ஓடியுள்ளது. இதைப் பார்த்து அந்த நோயாளியும் அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மறுத்துள்ளார். ஆனால் நடந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மருத்துவரே கூறியுள்ளார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை, அந்த பிரெட் கம்பெனிக்கு 3 வருட தடை விதித்துள்ளதாம்.