14 வயது மகளை கற்பழித்த கொடூர தந்தை

புதன், 27 ஆகஸ்ட் 2014 (13:25 IST)
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
 
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் மல்லந்தூர் அருகே உள்ள உலுவாகலு கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்(வயது 45). கூலி தொழிலாளி. இவருடைய மகள் ராதா(14, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் மல்லந்தூர் பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் ராதா பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் லோகேஷ் பெற்ற மகள் என்று கூட பாராமல் ராதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் லோகேஷ், பவித்ராவை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ராதா வெளியில் யாரிடமும் கூறவில்லை.
 
இந்த நிலையில், நேற்று காலையில் தன்னை தந்தை லோகேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது தாயிடம் கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராதாவின் தாய் நடந்த சம்பவம் குறித்து மல்லந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெற்ற மகளையே பலாத்காரம் செய்ததாக லோகேசை கைது செய்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட ராதாவை காவல்துறையினர் மீட்டு சிக்மகளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்