மேலும், இருவரது பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே இந்த உடல் சார்ந்த இணைதல் ஏற்பட்டுள்ளது என்றும், அதற்குப் பிறகே அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து இருப்பதாகக் கூறிய நீதிபதி, இருவருமே தங்கள் வாலிப பருவத்தின் தொடக்கத்தில் இருந்ததாகவும், அந்த வேகத்திலேயே இந்த தவறு நடந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், இவர்களுக்குள் நடந்த உடலுறவு முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்றே தவிர தன்னிச்சையாக நிகழ்ந்தல்ல என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.