கர்னூலை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ரவிக்குமார், ஸ்ரீனிவாசலு. கடந்த 2013 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியை ஆட்டோவில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்தனர். அதன் பின்பு இரும்பு கம்பியால் மாணவியை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட, 20 நாட்களுக்கு பிறகு சுயநினைவு திரும்பியது. அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் விவரித்தார்.