மத்திய ரயில்வே இணை அமைச்சர் மீது பாலியல் புகார்

சனி, 11 ஆகஸ்ட் 2018 (10:46 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய சட்டத்தை உருவாக்கும் அமைச்சர்களே பாலியல் புகாரில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹன் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென் பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகெளன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரை ஏற்றுகொண்ட போலீசார் அமைச்சரின் மீது ஐபிசி 417, 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துளனர்.
 
இந்த வழக்கு குறித்து விசாரித்து வருவதாகவும் தேவைப்பட்டால் அமைச்சர் ராஜென் மீதும் விசாரணை நடைபெறும் என்றும் நாகெளன் போலீஸ் கமிஷனர் ஷங்கர் ராய், ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்