பள்ளிக்குள் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி!

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (12:37 IST)
ஒடிசா மாநிலம் புனவேஸ்வரில் 4 வயது சிறுமியை இருவர் பள்ளிக்குள்  வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
புவனேஸ்வரில் பள்ளிக்கு சென்ற 4 வயது சிறுமி மீது இருவர் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த சிறுமி படிக்கும் பள்ளிக்கு உள்ளேயே நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை புவனேஸ்வர் காவல் துறை துணை ஆணையர் உறுதி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்