தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டுவதை பற்றி குறிப்பிடவில்லை என்றாலும் வேறு வழிகளில் கட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஏனென்றால், இது எங்கள் மரியாதை மற்றும் கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இது சம்பந்தமாக ஏற்கனவே பல காலமாக சாதுக்களும், மடாதிபதிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துக்களும், முஸ்லிம் தலைவர்களும் இது தொடர்பாக அரசுடன் பேசியிருக்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, ராமர் கோவில் விவகாரத்தை எப்போதும் பேசிக்கொண்டிருப்பது சரியானதல்ல.