பா.ஜ.க. எம்.பி., ஆர்.கே. சிங் என்பவர் தான் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியவர். இது குறித்து அவர் கூறுகையில், "தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பலரும் கட்சியால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பாஜக அவசர அவசரமாக சேர்த்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறது".
"பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு வேட்பாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். " என்று கூறினார். பீகாரில் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அக்கட்சி எம்.பி. ஆர்.கே.சிங்கின் இத்தகைய பேச்சு பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.