ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
3 பேரும் குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதாலும் தாங்கள் 23 ஆண்டுகள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருவதாலும் தண்டனையை குறைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
தண்டனைக் குறைப்புக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் ராஜீவ் கொலையாளிகள் 3 பேரும் ஆறுதல் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதால் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.