நமது தேசிய கீதத்தை ரவீந்திரநாத் தாகூர் எழுதினார். அவர் மீதும், தேசிய கீதம் மீதும் நமக்கு எல்லாம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது.
ஆனால், தேசியகீதத்தில் உள்ள அதிநாயக என்ற வார்த்தையை நீக்க வேண்டும். காரணம், இது பிரிட்டிஷ் அரசை பாராட்டும் வகையில் உள்ளது. அதற்கு பதிலாக `மங்கல் காயே’ என்ற வார்த்தையை சேர்க்கலாம் என்றார்.
இந்த கவிதையை ரவீந்திரநாத் தாகூர் எழுதிய போதே, அது பிரிட்டிஷ் அரசை பாராட்டுவதாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், அதை அப்போது ரவீந்திரநாத் தாகூர் மறுத்தார். இந்நிலையில், பல வருடங்களுக்கு பின்பு, இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.