இளம் பெண்ணைக் கற்பழித்து கிணற்றில் தள்ளிய காமக் கொடூரன்

திங்கள், 21 ஜூலை 2014 (18:14 IST)
ராஜஸ்தானில் 17 வயது இளம் பெண்ணைக் கற்பழித்து கடுமையாகத் தாக்கிய மர்மநபர் ஒருவர், அந்தப் பெண்ணைக் கொலை செய்ய எண்ணி கிணற்றில் தள்ளியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் 17 வயது பெண் வயல் வேலைக்குச் சென்றார். மாலையில், வேலை முடிந்து அவர் வீடு திரும்புபோது வழியில் ஒரு மர்ம நபர் அவளை மிரட்டி கடத்தி சென்றார்.

காட்டுப் பகுதியில் மறைவிடத்தில் அந்த பெண்ணை அவர் கொடூரமாகக் கற்பழித்தார். பிறகு அந்த பெண்ணை கொலை செய்ய அந்த நபர் முடிவு செய்தார்.

எனவே, அந்த பெண்ணை பலமாக தாக்கி இழுத்து சென்றார். வயல் வெளியில் இருந்த பெரிய கிணற்றுக்குள் அந்த பெண்ணை தள்ளி விட்டு ஓடி விட்டார்.

கிணற்றுக்குள் விழுந்த அந்த பெண் உதவி கோரி கதறி கூச்சலிட்டுள்ளார். ஆனால் அப்போது பலத்த மழை பெய்ததால் அந்தப் பெண்ணின் குரல் வெளியில் கேட்கவில்லை.

இரவு முழுவதும் அந்தப் பெண் கிணற்றுக்குள் இருந்த பம்பு செட் குழாயைப் பிடித்தபடி போராடியுள்ளார். காலையில்தான் அந்தப் பெண்ணின் குரல் கேட்டு விவசாயிகள் ஓடி வந்து மீட்டனர்.

சுமார் 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்கதப் பெண்ணைக் கற்பழித்து கொல்ல முயன்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்