வெளியானது நிர்வாண வீடியோ - மீண்டும் சர்ச்சையில் ராதிகா ஆப்தே

செவ்வாய், 29 நவம்பர் 2016 (14:11 IST)
நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சி மீண்டும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடிகை ராதிகா ஆப்தே நடிக்கும் படங்களில் நிர்வாண காட்சிகள் இடம் பெறுவதும், படம் வெளியாவதற்கு முன்பே அந்த புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாவதும் வாடிக்கையாக ஒன்றாக  மாறிவிட்டது.
 
ஏற்கனவே  ‘மேட்லி ’ மற்றும்  ‘பார்ச்சட்’ ஆகிய படங்களில் அவர் நடித்த நிர்வாண காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், அவர் ‘பொம்பாரியா’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த புகைப்படங்கள்தான் தற்போது லீக் ஆகியுள்ளது. 
 
இதுபற்றி அப்படத்தின் இயக்குனர் மைக்கேல் வார்டு கூறுகையில் “ ராதிகா நிர்வாணமாக நடித்த ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மேட்லி படத்தில் அவர் நடித்த புகைப்படங்கள் வெளியாகி, அவர் மனக்கவலையில் இருந்த போதுதான், எங்கள் படத்தில் அப்படிப்பட்ட காட்சியை எடுக்க வேண்டியிருந்தது. 
 
ஹோலி கொண்டாட்டத்துக்கு பின், அவர் குளிப்பது போல் ஒரு காட்சியை படமாக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் இருக்கும் மன நிலையில், நடிப்பாரா அல்லது காட்சியை மாற்றலாமா என யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர் தைரியமாக அக்காட்சியில் நடிக்க முன் வந்தார். 
 
கதைப்படி, அவர் சினிமா துறையில் செய்தி தொடர்பாளர். அவர் நிர்வாணமாக குளித்த வீடியோவை தன்னுடைய மொபைலில் வைத்திருப்பார். அவர் தெருவில் நடந்து வரும் போது, ஒரு திருடன் அவரது செல்போனை பிடிங்கிக் கொண்டு ஓடுவார். 


 

 
அந்த செல்போனில் இருக்கும் காட்சிகள் வெளியாகி விட்டால், தன்னுடைய வேலை போய் விடும் என நினைக்கும் அவர், அந்த திருடனை துரத்திக் கொண்டு ஓடுவர். அந்த காட்சியில் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து அவர் நடித்துக் கொடுத்தார்.
 
மற்றபடி, அவர் நடித்த காட்சியை லீக் செய்து, படத்துக்கு விளம்பரம் தேட நாங்கள் முயற்சிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்