2ஜி வழக்கு: சிபிஐ கூடுதல் இயக்குனர் ஆர்.கே.தத்தா தலைமை ஏற்றார்

வெள்ளி, 21 நவம்பர் 2014 (17:10 IST)
2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு சிபிஐ கூடுதல் இயக்குனர் ஆர்.கே. தத்தா தலைமையேற்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்த தத்தா 1981 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது சிபிஐ ஊழல் தடுப்பின் தலைவராக உள்ளார்.
 
2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா சந்தித்தாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  குற்றச்சாட்டுகளுக்கு முகாத்திரம் இருப்பதால் ரஞ்சித் சின்கா 2ஜி வழக்கு விசாரணையில் விலகியிருக்க வேண்டும என்று உத்தரவிட்டது. மேலும் ரஞ்சித் சின்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரி 2ஜி வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்காரணமாக 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு சிபிஐ கூடுதல் இயக்குனர் ஆர்.கே. தத்தா தலைமையேற்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்