இருப்பினும், தெளிவான தகவல் கிடைக்காத காரணத்தால், இந்த ரயில் சேவை எப்போது தொடங்கப்பட்டது என்ற தகவல் இல்லை. எனினும், "பஞ்சாப் மெயில்' தில்லிக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததாக பயணி ஒருவர் கடந்த 1912ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று கிடைத்த சில ஆவணங்களின்படி, கடந்த 1912ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, மும்பையிலிருந்து ஃபிரோஸ்பூருக்கு பஞ்சாப் மெயில் சேவை முதன்முதலாக தொடங்கப்பட்டது என்பதை அனுமானிக்க முடிகிறது.