”சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” முதல்வருக்கு லெட்டர் போட்ட கவர்னர்

Arun Prasath

திங்கள், 10 பிப்ரவரி 2020 (18:45 IST)
நாராயணசாமி கிரண் பேடி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவ அமைப்பினர், சிறுபான்மையினர், எதிர்கட்சிகள் என அணி அணியாக திரண்டு போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே புதுவை சட்டப்பேரவையில் வருகிற 12 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இந்நிலையில் புதுவையின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ”குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திருத்ததிற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், இது தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்றுகொள்ள முடியாது” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்