3 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV C-53

வியாழன், 30 ஜூன் 2022 (07:39 IST)
3 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV C-53
3 செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 53 என்ற ராக்கெட் என்ற தகவல் வெளியாகி உள்ளது 
 
இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 53ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள்கள் பூமியை மிக துல்லியமாக படம் எடுக்கும் என்றும் DS-EO உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் இருப்பதாகவும் தெரிகிறது
 
 இந்த ராக்கெட் வெற்றிகரமாக நிறைவு இந்தியாவுக்கு விண்வெளித்துறையில் மேலும் ஒரு கூடுதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்