மக்களிடம் உள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் மக்களுக்கு கிடைக்கிறது. 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாததால், சில்லரையும் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, தற்போது 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்கும் பணியை முடிக்கிவிட்டுள்ளது மத்திய அரசு. மராட்டிய மாநிலம், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் ரூ.500 நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது ஒரு நாளைக்கு 1 கோடி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.