தனது நீக்கம் பற்றி குறித்து அவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் அடித்தளத்தை அசைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களை நீக்கியுள்ளனர். எங்களை நீக்கியவர்கள் மீது தான் மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த அளவுக்கு கட்சியின் தரம் தாழ்ந்துவிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. கட்சி தற்போது கட்டப்பஞ்சாயத்து இயக்கமாக மாறியுள்ளது. ஒருவரின் உத்தரவுக்கு ஒட்டுமொத்த இயக்கமும் தலையாட்டுகிறது.
மேலும், டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே எங்கள் இருவரையும் நீக்குமாறு கெஜ்ரிவால் உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார். இரண்டு மாதமாக எங்களை வெளியேற்றுவதற்காகவே திட்டமிட்டு இந்த நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். தற்போது நாடகம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி என்றும் பூஷண் தெரிவித்தார்.