டெல்லியில் நடிகர் பிரகாஷ்ராஜ் உடன் சக பயணி சண்டை

வியாழன், 29 மே 2014 (17:09 IST)
நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் சக விமான பயணி ஒருவருக்கும் டெல்லி விமானநிலையத்தில் எதிர்பாராத விதமாக மோதல் ஏற்பட்டது.
 
திரைப்பட படபிடிப்பிற்காக டெல்லி சென்ற நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஏர் இந்தியாவுக்கு பயணச்சீட்டு வாங்குவதற்காக பயணிகள் வசிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.
 
அவருக்கு அருகில் மற்றொரு பயணி நின்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அந்த பயணி பிரகாஷ்ராஜை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. கீழே விழாமல் பிரகாஷ்ராஜ் சுதாரித்துள்ளார்.
 
இதனால் அந்த பயணியை இவர் கண்டித்தபோது, இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரையொருவர் கடுமையாக திட்டி கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, கோபமடைந்த பிரகாஷ்ராஜ் அந்த பயணியின் சட்டை காலரை பிடித்து இழுத்துள்ளார்.
 
பதிலுக்கு அவரும் பிரகாஷ்ராஜின் சட்டையை பிடித்துள்ளார். இந்த சண்டையை பார்த்து கொண்டிருந்த சக பயணிகள் குறுக்கிட்டு இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்