இதனிடையே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவதைத் தடுக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்றும், புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அணைக் கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தாரமையா நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் உறுதிபட தெரிவித்தார்.
இந்நிலையில், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் இன்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு இதுவரை எந்த அனுமதியும் கோரவில்லை என்றும், விண்ணப்பம் வந்தால் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.