ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், அமேதி மற்றும் உத்தரப் பிரதேச மாநில மக்களுக்குத் தேவையான நிதியை பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ராகுல் காந்தி விடுப்பு எடுத்து சென்றுள்ளார்.
அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்குமே தெரியவில்லை. அவரை இன்னும் 2 நாட்களுக்குள் கண்டுபிடித்து தகவல் கொடுப்பவருக்கு மிகப்பெரிய ரொக்க பரிசு வழங்கப்படும் என்று லக்னோ, அலகாபாத் மற்றும் அமேதி தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் காணப்பட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.