தற்செயலாக தன்னை சுட்டு கொண்ட காவல்துறை அதிகாரி

ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (15:48 IST)
கேரளாவில் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்செயலாக கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டதில் மரணமடைந்தார்.


 

 
கேரளாவில் ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரி சாபு மேத்யூ என்பவர், திருபணித்துறை பகுதியில் உள்ள ஏ.ஆர் கேம்பில் துணை தளபதியாக இருந்துள்ளார்.
 
இன்று அதிகாலை 2 மணி அளவில் காவல்துறை வாகனத்தில் ஓட்டுனர் மற்றும்  மற்றொரு காவல்துறை அதிகாரியுடன் இருந்தபொழுது தற்செயலாக கைத்துப்பாக்கியால் தனது நெஞ்சில் சுட்டு கொண்டதில் உயிரிழந்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்