உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு, வழிப்பறியைப் பற்றி புகார் கொடுக்க தலித் இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். ஆனால் அவர்களின் புகாரை போலிசார் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
அப்போது நடந்த சண்டையில், காவலர்களில் சிலர் கணவன் மனைவி இருவரையும் ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். கையில் குழந்தையோடு நிர்வானமாக ரோட்டில் நிற்கும் பெண்ணை பார்த்து அங்கிருந்த்த பொதுமக்கள் அதிர்ச்சியானார்கள்.அங்கு நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்த ஒருவர், அதை தன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய, இப்போது அந்த வீடியோ வைரலாக வலம் வருகிறது.
இது சம்பந்தமாக, காவல் துறை சிலரை கைது செய்துள்ளதாகவும், அதில் அந்த தம்பதியும் அடங்குவார்களா என்பது தெரியவில்லை.