இது குறித்து கான்பூர் மண்டல ஐ.ஜி.யின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், "மூத்த அதிகாரிகளின் துன்புறுத்தல் மற்றும் அவமானப்படுத்தும் விசயங்களால் ரசூலாபாத் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட வினோத் குமார் என்ற காவல்துறை துணை ஆய்வாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் " என்று கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணை செய்து, 24 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கான்பூர் தெஹாத் மாவட்ட சூப்பிரெண்டு சபாராஜிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி. கூறியுள்ளார்.