இவர்கள் அனைவரும் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தது தொடர்பான வழக்கில், இந்த 6 பேர் மீதும் துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் மாநில காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
இதில் குற்றம் சாற்றப் டப்பட்ட 6 பேரில் தெசின் அக்தர், முகமத் அசார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தங்களது கொலைப்பட்டியலில் உள்ளவர்களுக்கு மெக்னீசியம் சல்பேட், ஆமணக்கு விதை உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட விஷ கலவை தடவப்பட்ட கடிதங்களை அனுப்பி கொல்ல திட்டமிட்டதாக கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.