ஆசியான், கிழக்காசிய மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை நேற்று(செவ்வாய்க்கிழமை) துவங்கினார். இந்த நிலையில் 25-வது ஆசிய உச்சி மாநாட்டின் மாபெரும் விளம்பரப்பலகையை தனது செல்போன் வழியாக புகைப்படம் எடுத்து அதனை பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தற்போது மியான்மர் நாட்டில் இருக்கும் நரேந்திர மோடி அங்கிருந்து தனது செல்போனில் அவரே எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி புகைப்படத்தை பகிர்ந்து அடுத்த 13 நிமிடங்களில் அவரது பகிர்வை 35,000 பேர் தொடர ஆரம்பித்தனர். அவரது படத்துக்கு மட்டும் 2,537 விருப்பங்கள் வந்துள்ளன.