பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நாளை நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளார். சர்வதேச விவேகானந்தா அறக்கட்டளை மற்றும் டோக்கியோ அறக்கட்டளை இணைந்து நடத்தும் கருத்தரங்கில் அவர் பங்கேற்க உள்ளார். பீகார் பயணத்தின் போது அவர் சரித்திர புகழ்பெற்ற புத்தகையா ஆலயத்திற்கும் செல்ல உள்ளார்.
கடந்த ஜூலை 25 ஆம் தேதி பீகாரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடியும், நித்தீஷ்குமாரும் ஒரே மேடையில் தோன் றினர். அரசு விழா நிறைவடைந்த பின்பு பாட்னாவில் நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, நித்தீஷ்குமாரின் அரசியலில் டி.என்.ஏ பிழை இருப்பதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.